வசந்தாமணிக்கு தத்து கொடுக்கப்பட்டசோபன் பாபு-ஜெயலலிதா மகன்.. வைரலாக சுற்றும் 'ஆவணம்'
Recommended Video

சென்னை: தனக்கு பிறந்த குழந்தையை வளர்க்க வசந்தாமணிக்கு ஜெயலலிதா பத்திரம் போட்டு கொடுத்தை போன்ற ஆவணங்கள் இப்போது இணையத்தில் வைரலாக சுற்றி வருகின்றன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவிற்கு பிறந்த மகன் நான் தான் என்று ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வந்தார்.
இந்நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்களின் நகல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
|
ஆவணங்கள்
ஈரோட்டைச் சேர்ந்த வசந்தா மணி என்ற பெண்ணிற்கு, ஜெயலலிதா தனக்கு பிறந்த ஆண் குழந்தையை தத்து கொடுத்தது போன்ற ஆவணங்கள் அதில் உள்ளன. ஒப்பந்தத்தின் மேலே கோமளவள்ளி என்ற ஜெயலலிதா என்று பெயர் இடம் பெற்றுள்ளது.

தயாரிக்கப்பட்ட ஆவணம்
எம்.ஜி.ஆர். தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது, தனது சோபன் பாபுவிற்கு பிடிக்காததால், இருவரும் பிரிந்ததாக அந்த ஆவணங்களில் ஜெயலலிதா கூறியது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
|
நெட்டிசன்கள் கேலி
இந்த ஆவணம் பழையது போல காணப்பட வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் இருந்து போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறுகிறாராகள்.

நீதிமன்றத்தில் குட்டு வாங்கினார்
நீதிமன்றத்தில் இந்த ஆவணங்களை சமர்பித்தபோது, இது ஜோடிக்கப்பட்டது என சிறு குழந்தைக்கு கூட தெரியும் என கூறிய நீதிபதி மகாதேவன், ஆய்விற்கு பின் பொய்யானதாக இருந்தால் சிறைக்கு செல்ல வேண்டியதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஆவணங்கள் எப்படி இணையத்தில் வைரலானது என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications