செங்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் விவசாயி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு!
நெல்லை அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் வேதனையடைந்த விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: செங்கோட்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரிய விவசாயியிடம் அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வேதனையடைந்த விவசாயி தாலுகா அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் கணக்குகளை சரிபார்க்க ஆண்டுதோறும் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் நடைபெறும். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் விவசாய நிலம், தரிசு, புறம்போக்கு நிலம், பட்டா உரிமையாளர் உள்ளிட்ட 22 வகையான கணக்குகள் சரிபார்க்கப்படுவது வழக்கம்.
செங்கோட்டை தாலுகா அலுவலக குறுவட்டங்களில் கடந்த மே 19ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கியது.
நேற்று முன்தினம் பண்பொழிகுறு வட்டம் பெரிய பிள்ளை வலசை தேன் பொத்தை, மேக்கரை ,வடகரை ,கணக்கப்பிள்ளை வலசை உள்ளிட்ட பகுதிகளின் கணக்குகள் சரிபார்க்கபட்டன,

4 ஆண்டுகளாக போராடும் முதியவர்
மேலும் ரேஷன் அட்டை, மண்ணென்னெய் வேண்டி, வறட்சி நிவாரணம் கோரியும், பட்டாமாறுதல், உட்பிரிவு மாறுதல் போன்ற 187 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் பெற்றார். இதில் கணக்கப் பிள்ளை வலசை கிராமத்தில் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி வேம்புமாரி என்ற முதியவர் பட்டா மாறுதலுக்கும் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் மனு அளித்துள்ளார்.

லஞ்சம் கேட்ட அதிகாரிகள்
அவரது நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் பட்டா மாறுதலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளனர். தொடர்ந்து அவர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி
இந்நிலையில் இன்று செங்கோட்டை,கற்குடி,புதூர், புளியரை பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைப்பெற்றது. இதில் நெல்லைமாவட்ட ஆட்சியர் கருணாகரன் கலந்துகொண்டார்.

அலையவைக்கும் அதிகாரிகள்
அப்போது அந்த முதியவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலையவைத்து பணம் கேட்பதாக முறையிட்டார். இல்லை தான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

தீக்குளிக்க முயற்சி
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் விவசாயி திருப்த்தியடையவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் புறப்பட்டு சென்ற 10 நிமிடத்தில் தாலுகா அலுவலக வளாகத்தில் பெட்ரோலை தலையில் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார்.

பெரும் பரபரப்பு
அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த செங்கோட்டை போலீசார் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications