செங்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் விவசாயி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு!
நெல்லை அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் வேதனையடைந்த விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: செங்கோட்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரிய விவசாயியிடம் அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வேதனையடைந்த விவசாயி தாலுகா அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் கணக்குகளை சரிபார்க்க ஆண்டுதோறும் ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் நடைபெறும். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் விவசாய நிலம், தரிசு, புறம்போக்கு நிலம், பட்டா உரிமையாளர் உள்ளிட்ட 22 வகையான கணக்குகள் சரிபார்க்கப்படுவது வழக்கம்.
செங்கோட்டை தாலுகா அலுவலக குறுவட்டங்களில் கடந்த மே 19ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கியது.
நேற்று முன்தினம் பண்பொழிகுறு வட்டம் பெரிய பிள்ளை வலசை தேன் பொத்தை, மேக்கரை ,வடகரை ,கணக்கப்பிள்ளை வலசை உள்ளிட்ட பகுதிகளின் கணக்குகள் சரிபார்க்கபட்டன,

4 ஆண்டுகளாக போராடும் முதியவர்
மேலும் ரேஷன் அட்டை, மண்ணென்னெய் வேண்டி, வறட்சி நிவாரணம் கோரியும், பட்டாமாறுதல், உட்பிரிவு மாறுதல் போன்ற 187 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் பெற்றார். இதில் கணக்கப் பிள்ளை வலசை கிராமத்தில் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி வேம்புமாரி என்ற முதியவர் பட்டா மாறுதலுக்கும் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் மனு அளித்துள்ளார்.

லஞ்சம் கேட்ட அதிகாரிகள்
அவரது நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் பட்டா மாறுதலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளனர். தொடர்ந்து அவர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி
இந்நிலையில் இன்று செங்கோட்டை,கற்குடி,புதூர், புளியரை பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைப்பெற்றது. இதில் நெல்லைமாவட்ட ஆட்சியர் கருணாகரன் கலந்துகொண்டார்.

அலையவைக்கும் அதிகாரிகள்
அப்போது அந்த முதியவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலையவைத்து பணம் கேட்பதாக முறையிட்டார். இல்லை தான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்தார்.

தீக்குளிக்க முயற்சி
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் விவசாயி திருப்த்தியடையவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் புறப்பட்டு சென்ற 10 நிமிடத்தில் தாலுகா அலுவலக வளாகத்தில் பெட்ரோலை தலையில் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார்.

பெரும் பரபரப்பு
அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த செங்கோட்டை போலீசார் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications