For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை அருகே மனைவி மற்றும் 3 மாத குழந்தை கழுத்தை அறுத்து கொலை.. தலைமறைவான கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு

தஞ்சை அருகே மனைவி மற்றும் 3 மாத குழந்தையை கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சை: மனைவி மற்றும் 3 மாத குழந்தையை கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் மனைவி மற்றும் 3 மாத குழந்தையை கணவர் கொலை செய்துள்ளார். குடும்ப பிரச்னையில் மனைவி ஷீலா மற்றும் 3 மாத குழந்தை பிரதீப் ஆகியோரின் கழுத்தறுத்து கொன்று வீட்டு கணவர் ஆறுமுகசாமி தப்பியோடி விட்டார்.

A husband kills wife and 3 months baby in Thanjavur

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வாக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மனைவியையும் குழந்தையையும் கொடூரமாக கொன்ற கணவர் ஆறுமுகசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A husband kills wife and 3 months baby in Thanjavur. Police searching the absconded husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X