சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் - பரபரப்பு

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர்

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மனு அளிப்பதற்காக வந்து செல்வார்கள்.

A lady suicide attempt in Chennai Police commissioner office

இந்நிலையில்,செல்வி என்ற பெண் இன்று காலை தனது மகள் பூஜாவுடன் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பிரதான வாசல் அருகே வந்த செல்வி, திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது ஆணையர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, விரைந்து சென்று அந்தப் பெண்ணையும், அவருடன் வந்திருந்த அவரது மகள் பூஜாவையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

அவர்கள் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்? என்பது போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி போலீசார் இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஓய்வதற்குள் பெண் ஒருவர் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆணையர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+