குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவர்.. போட்டுத்தள்ளிவிட்டு போலீஸில் சரணடைந்த மனைவி!
குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவியே வெட்டி கொலை செய்தார்.
Recommended Video
ராமநாதபுரம்: குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவியே வெட்டி கொலை செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே உள்ள கொண்டு நல்லான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு ராமுத்தாய் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
சின்னத்துரை கடந்த 10 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
அதிகமான டார்ச்சர்
ராமுத்தாய் கூலிவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரையின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
பணம் இல்லை
நேற்றிரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த சின்னத்துரை மது குடிக்க பணம் கேட்டு ராமுத்தாயை அடித்து துன்புறுத்தியுள்ளார். ராமுத்தாய் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
அரிவாளுடன் மிரட்டல்
இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரை ராமுத்தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் வெட்டி கொலை செய்துவிடுவதாக அரிவாளை தூக்கிக்கொண்டு மிரட்டியுள்ளார்.
போலீஸில் சரண்
இதனால் அதிர்ச்சியடைந்த ராமுத்தாய் தன்னையும் தனது குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள கணவரை வெட்டி கொலை செய்தார். பின்னர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அவர் சரணடைந்தார்.