For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் கணவர் 2-வது திருமணம்... நீதி கோரி மதுரையில் மனைவி தர்ணா

Google Oneindia Tamil News

மதுரை: அமெரிக்காவில் உள்ள தனது கணவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறி பெண் ஒருவர் மதுரை தள்ளாக்குளம் காவல்நிலையத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஜெனீபாராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு விதன் பாலாஜி என்ற மகன் இருக்கிறார்.

A woman staged dharnas in front of Police station in Madurai

இந்நிலையில் இன்று காலை ஜெனீபா ராணி மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தனது கணவர் பாலகிருஷ்ணன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஜெனீபாராணியை சமாதானப்படுத்திய போலீஸார், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஜெனீபாராணி இது குறித்து புகார் ஒன்றையும் அளித்தார். அமெரிக்காவில் உள்ள தனது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
A woman staged dharnas in front of Police station in Thallagulam, Madurai alleged that her husband who married with another women in US and has lodged complaint against her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X