சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் உடல் சடலமாக மீட்பு
கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளைஞர் முகமது பயாஸ் உடல் மீட்கப்பட்டது.
Recommended Video

சென்னை: நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளைஞர் முகம்மது பயாஸ் உடல் மீட்கப்பட்டது.
முகமது ஃபயாஸ் என்பவர் சென்னை மவுண்ட் ரோட்டில் வசித்துவந்தார். இவர் வாகன நிறுவனம் ஒன்றின் உதிரி பாக விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்த அவர் நேற்று காலை தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து தன்னை கடைசியாக பார்க்க விரும்பும் நபர்கள் நேப்பியர் பாலத்திற்கு வாருங்கள் என கூறியுள்ளார்.
இதனால் பதறிய அவரது நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது தன்னை பார்க்க வந்த நண்பரிடம் , தன்னுடைய மொபைல் போன் பர்ஸை கொடுத்துவிட்டு, அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே கீழே குதித்தார் ஃபயாஸ்.
மற்ற நண்பர்கள் அவர் குதித்த பிறகே வந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் படகு மூலம் ஃபயாஸின் உடலை தேடினர். இந்நிலையில் அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications