2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய காதலனை உதறிய அபிராமி
Recommended Video
சென்னை: வெறும் 2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய காதலனை அபிராமி உதறியுள்ளார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.
காதல் திருமணம்
இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்ற அபிராமியை நாகர்கோவிலில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நானும் விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
தாய் வீட்டுக்கு செல்வது
நாங்கள் சென்னையில் உள்ள குன்றத்தூரில் குடி பெயர்ந்தோம். நான் அப்பகுதியில் உள்ளவர்களுடன் நன்றாக பேசுவதை வைத்து விஜய்க்கு என் மீது சந்தேகம் இருந்தது. இதனால் நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டையிடுவதும் கோபித்து கொண்டு நான் தாய் வீட்டுக்கு செல்வதும் வாடிக்கையாக இருந்தது.
பழக்கம்
இந்நிலையில்தான் குழந்தைகளுடன் குன்றத்தூர் பகுதியில் பிரியாணி கடைக்கு சென்ற போது அங்கு சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இது எனக்கு ஆறுதலை தந்தது. இதனால் அவ்வப்போது அவரது கடைக்கு சென்று விடுவேன். இதையடுத்து எங்களுக்குள் நெருங்கி பழகும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
குழந்தைகளை கொன்றேன்
இதனால் குடும்பத்தை விட முடிவு செய்தேன். காதல் கணவருடன் 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோதும் சுந்தரத்துடனான 2 மாத கள்ளக்காதலை விட முடியவில்லை. இதனால் சுந்தரத்துடன் எப்படி வாழ்வது என்று யோசித்த போது கணவரையும் குழந்தைகளையும் கொன்றுவிடும்படி அவர்தான் எனக்கு ஐடியா கொடுத்தார். இதற்கு நானும் ஒப்புக் கொண்டு குழந்தைகளை கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார்.