விஜய் வாங்கிக் கொடுத்த ஸ்கூட்டியில் குன்றத்தூர் முழுக்க லூட்டி அடித்த அபிராமி!
Recommended Video

சென்னை: குடும்பம் நடத்த கஷ்டப்பட்டாலும் மனைவிக்காக ஸ்கூட்டியை வாங்கிக் கொடுத்தேன் என்று குன்றத்தூர் அபிராமியின் கணவர் விஜய் தெரிவித்தார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவருக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

நாகர்கோவிலில் கைது
இதனால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார். இதையடுத்து பைக்கை கோயம்பேட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் தப்பி சென்றார். இந்நிலையில் அவர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சில விஷயங்கள்
இந்நிலையில் இரு குழந்தைகளையும் பறிகொடுத்த விஜய் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விஜய் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

கவனித்த அபிராமி
அப்போது அவர் கூறுகையில் தன் குழந்தைகளை ஒரு முறை கூட அபிராமி அடித்ததில்லை. தன் குழந்தைகளின் படிப்பிலிருந்து அவர்களது தேவைகள் என அனைத்தையும் அவர்தான் கவனித்து கொண்டார்.

கதறி அழுத விஜய்
குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டாலும் அவருக்காக இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்தேன். அந்த வாகனத்திலும் தன் இரு குழந்தைகளின் பெயரை எழுதிக் கொடுத்தேன். என் முன்னால் குழந்தைகளை ஒரு முறை கூட அடிக்காத அபிராமி தற்போது கொன்று விட்டாரே என கதறி அழுதார் விஜய். இவர் வாங்கிக் கொடுத்த ஸ்கூட்டியில் ஊர் முழுக்க லூட்டி அடித்துள்ளார் அபிராமி.












Click it and Unblock the Notifications