இறந்தது தெரியாமல் மகளுக்கு முத்தம் கொடுக்க சென்ற தந்தை.. சாமர்த்தியமாக தடுத்த அபிராமி
Recommended Video
சென்னை: குன்றத்தூர் இரட்டை கொலை சம்பவத்தில் மகள் கார்னிகா இறந்தது தெரியாமல் மகளுக்கு முத்தம் கொடுக்க தந்தை சென்றும் அதை அபிராமியும் சாமர்த்தியமாக தடுத்துள்ளார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.
இதையடுத்து நாகர்கோவிலுக்கு தப்பி சென்ற அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் குழந்தைகள், கணவருக்கு 30-ஆம் தேதியே பாலில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிவித்தார். எனினும் அவர்களில் மகனும் கணவரும் சாகாமல் மறுநாள் காலை விழித்து கொண்டனர். ஆனால் கார்னிகா இறந்துவிட்டார்.
அப்போது குழந்தை கார்னிகா இறந்தது தெரியாமல் முத்தம் கொடுக்க சென்றார். முத்தம் கொடுத்தால் தனது குட்டு வெளிப்பட்டு விடும் என பயந்த அபிராமி, அசந்து தூங்குகிறாள் நீங்கள் படுக்கை அறைக்கு சென்றால் விழித்துக் கொள்வாள் என்றதும் விஜயும் இதனை நம்பி வேலைக்கு சென்று விட்டார்.