மன்னிக்க முடியாத குற்றம்.. எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை.. தமிழிசை அதிரடி
எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உறுதியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை : பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்கள் ஆளுநருக்கு எதிரான கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பதிவிட்டு இருந்தார் . இதனால், எஸ்.வி சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எஸ்.வி சேகரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், எஸ்.வி சேகர் பெண்கள் பற்றி தெரிவித்து இருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொண்டு வருகிறோம். தவறான கருத்துகளைப் பரப்புவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் கருத்தை தெரிவித்துவிட்டு, அதை நான் எழுதவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மன்னிக்க முடியாத குற்றம். சமூக வலைத்தளத்தில் ஒருமுறை தப்பான கருத்தை கூறிவிட்டாலும், அது பரவிக் கொண்டேதான் இருக்கும்.
தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் சூழல் வர வேண்டும் என்று பாஜக நினைப்பதாகவும், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் தவறான கருத்துகளை பரப்பக் கூடாது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
-
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications