மன்சூர் அலிகான், பியூஷ் மனுஷ், வளர்மதி- சேலம்- சென்னை 8 வழி சாலைக்கு எதிரானவர்கள் அடுத்தடுத்து கைது
சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதில் போலீசார் மும்முரமாக இருந்து வருகிறது.
Recommended Video

சேலம்: சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு மக்கள் எதிர்ப்பு தொடர்கிறது. அதேநேரத்தில் இந்த 8 வழிசாலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் என சந்தேகிப்பவர்களை உடனடியாக கைது செய்வதில் போலீசார் மும்முரமாக இருந்து வருகிறது.
சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு எதிரான போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்றார். அப்போது 8 வழிசாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என ஆவேசமாக பேசினார்.

இது தொடர்பாக போலீஸ் முதலில் வழக்கு மட்டும் பதிவு செய்தது. இதன் பின்னர் சேலம் பகுதியில் அவசரகதியில் நிலங்களை அளவெடுக்க தொடங்கியது அரசு.
இதனால் சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக சேலம் பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இந்த பதற்றம் போராட்டமாக உருவெடுத்துவிடாமல் இருப்பதில் அரசு படுதீவிரமாக இருக்கிறது.
இதன் ஒருபகுதியாக நடிகர் மன்சூர் அலிகான் ஞாயிற்றுக்கிழமையன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து நேற்று திங்கள்கிழமையன்று சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இவர்கள் மீது அரசுக்கு எதிராக மக்களை போராடத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று சேலம் ஆச்சாங்குட்டப்பட்டியில் நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் சமூக ஆர்வலர் வளர்மதி பேசிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது. சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு எதிராக சிறு கருத்து தெரிவித்தாலும் கைது என்கிற நிலைமை உருவாகி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications