ஜெயலலிதாவ பற்றி கனிமொழிக்கு பேச அருகதையே இல்லை - சி.ஆர்.சரஸ்வதி சாடல்
Subscribe to Oneindia Tamil

விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்தில் உள்ள சத்திரம் பள்ளி அருகே அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகை சி.ஆர்.சரஸ்வதி வாக்கு சேகரித்தபோது,
"இந்த கூட்டத்தை பார்க்கும்போது ஓட்டு கேட்க வந்ததுபோல் தெரியவில்லை. வெற்றி பெற்றதுபோல் உள்ளது. 6 மாதத்துக்கு முன் ஜாமீனில் வந்த கனிமொழிக்கு முதல் அமைச்சரை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பல லட்சம் கோடி ரூபாயை வெளிக்கொண்டு வர வேண்டும். காவிரி தண்ணீர் தமிழ்நாட்டில் கரைபுரண்டு வரவேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும்.
ஒரு ரூபாய் இட்லி இந்தியா முழுவதும் கிடைக்க வேண்டும் எனில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற்று அம்மாவை பாரத பிரதமராக்க பாடுபடுவோம்" இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications