சிறைக்குள் சொகுசு வாழ்க்கையா? .. அது பழைய படங்கள்.. புழல் சிறை ஏடிஜிபி சுக்லா மறுப்பு
Recommended Video

சென்னை: புழல் சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.
புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் உள்ள கைதிகள் செல்போன் முதல் ஷூ வரையும் சன் கிளாஸ் முதல் கரன்ட் குக்கர் வரை ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் புகைப்படங்களாகவே தற்போது வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்க வரும் கைதிகளுக்கு இத்தனை சொகுசு வாழ்க்கையா என விழிபிதுங்கும் அளவுக்கு ஏற்பட்டுவிட்டது.
இதுகுறித்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. புழல் சிறையில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில் புழல் சிறையில் வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன் எடுக்கப்பட்டவை.
புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications