உள்ளாட்சித் தேர்தலில் போட்டிய அதிமுக விருப்ப மனு - வார்டுகள் அறிவிக்கப்படாததால் பலர் தயக்கம்
நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பவர்களிடம் அதிமுக சார்பில் விருப்ப மனு பெறுவது தொடங்கியுள்ளது. வார்டுகள் அறிவிக்கப்படாததால் பலர் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஓவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. வரும் 22ம் தேதி வரை அக்கட்சியினருக்கு விருப்ப மனு வழங்கும் வகையில் ஏற்பாடு செயயப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மனுக்களை பெற்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருப்ப மனுக்களை பெறும் அதிமுகவினர் அதில் கேட்கப்பட்டுள்ள 20 கேள்விகளுக்கும் முழுமையாக பதில் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெயர், முகவரி தவிர்த்து கட்சியில் எந்த ஆண்டில் இருந்து உறுபபினர்களாக உள்ளீர்கள், அதிமுகவில் இருந்து எப்போதாவது நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்களா? கட்சி ஓழுங்கு நடவடிக்கையை எப்போது சந்தித்தீர்கள், போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற அனுபவம் உண்டா உள்ளிட்ட 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதில் எந்த வார்டு யாருக்கு என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இதனால் பலர் விருப்ப மனு தாக்கல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆண், பெண், பொது, தனி வார்டுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே விருப்ப மனுக்கல் தாக்கல் அதிகமாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். வரும் 20ம் தேதி விருப்ப மனுக்களை பெறுவதும், தாக்கல் செய்வதும் சூடு பிடிக்கும் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications