நீங்க கொடுத்தா.. நாங்களும் கொடுப்போம்ல... கருணாநிதி ஊழல்.. பிட் நோட்டீஸ் போட்ட அதிமுக!
சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கைகளை சின்னதாக புக்காக போட்டு விநியோகித்த திமுகவினருக்குப் போட்டியாக அதிமுகவினரும் பிட் நோட்டீஸ் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பு விவரத்தை விளக்கி திமுக தலைவர் கருணாநிதி தொடர் அறிக்கைகள் விடுத்திருந்தார். அதை புத்தக வடிவில் மாற்றி திமுகவினர் பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

இதற்குப் பதிலடியாக கருணாநிதியின் ஊழல் குறித்த துண்டுப் பிரசுரங்களை அதிமுகவினர் தயாரித்து மாநிலம் முழுவதும் விநியோகித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கு சிறு சிறு மோதல்களும் நடந்தன.
இந்த நிலையில், சென்னையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதி மாணவரணி பகுதி செயலாளர் வின்சட்ராஜ் தலையில் கருணாநிதி ஊழல் குறித்த துண்டு பிரசுரங்களை வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக மாவட்டசெயலாளர் வி.பி. கலைராஜன், எம்.பி.விஜயகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கினர்.

இதில், தென்சென்னை வடக்கு மாவட்ட மாணவரனி செயலாளர் செந்தில் வேல், அப்துல் கறிம் (எ) பாபு, எம்.சி விஜயராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடைபாதை வியாபாரிகள், கண்ணில் பட்ட பொதுமக்கள் என சகலரிடமும் இந்த துண்டுப் பிரசுரங்களை அதிமுகவினர் வழங்கினர்.












Click it and Unblock the Notifications