தற்போதே வெற்றிக் கொண்டாட்டத்தை துவங்கிவிட்ட அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாக்கு எண்ணிக்கை நடந்து வருகையில் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தற்போதே வெற்றிக் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. 10 மணி நிலவரப்படி அதிமுக 115 இடங்களிலும், திமுக 79 இடங்களிலும், பாமக 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் அதிமுகவினர் சென்னையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர். அவர்கள் இனிப்புகள் வழங்கி தற்போதே வெற்றிக் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.

அங்கு கூடியுள்ள கட்சியினர் கூறுகையில்,
எங்கள் அம்மா கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டார். அதனால் தான் மக்கள் அவரை மீண்டும் ஆட்சிக்கு வர அனுமதித்துள்ளனர். எங்கள் அம்மா தான் மீண்டும் முதல்வர் ஆவார் என்றனர்.












Click it and Unblock the Notifications