வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக கவுன்சிலர்
வேலூர்: வாணியம்பாடியில் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்த பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக கவுன்சிலர் ஜர்கீஸிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 87வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

நண்பகல் 12 மணிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் அகமது அந்த வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்த பெண் வாக்காளர்களுக்கு அதிமுகவை சேர்ந்த 17வது வார்டு கவுன்சிலர் ஜர்கீஸ் பணம் அளித்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அகமது மற்றும் திமுகவினர் ஜர்கீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தேர்தல் அதிகாரி ஜெயப்பிரகாஷ் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து ஜர்கீஸை பிடித்தபோது அவர் தப்பியோட முயன்றார். ஜர்கீஸை விடுவிக்குமாறு அங்கிருந்த அதிமுகவினர் தெரிவித்தனர். போலீசார் ஒரு வழியாக ஜர்கீஸை பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பணப் பட்டுவாடா தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications