ஏகே-47 துப்பாக்கி வைத்து ஜெயலலிதாவை பாதுகாத்தாரா? திவாகரன் மீது கே.பி.முனுசாமி பாய்ச்சல்
ஏகே-47 ரக துப்பாக்கியை வைத்து ஜெயலலிதாவை பாதுகாத்ததாக திவாகரன் கூறியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திவாகரன் பொய் சொல்லி ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்
கிருஷ்ணகிரி: ஏகே -47 ரக துப்பாக்கியைக் கொண்டு ஜெயலலிதாவைக் காப்பாற்றியதாக திவாகரன் கூறியிருப்பதற்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் அந்த துப்பாக்கி திவாகரனுக்கு எப்படி கிடைத்து என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனது வீட்டில் கே.பி.முனுசாமி இனறு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவை திவாகரன் ஏகே -47 ரக துப்பாக்கியை வைத்து பாதுகாத்ததாக கூறுவதில் உண்மையில்லை என்றார்.

ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் காவல்துறையில் எஸ்பி ரேங்கில் உள்ள அதிகாரிகள் கூட அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும். அப்பகு இருக்கும் போது திவாகரனுக்கு எப்படி அந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
யாரை ஏமாற்றுவதற்காக திவாகரன் இப்படி பேசி வருகிறார் என்றும் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். ஏற்கனவே திவாகரன் அதிமுகவை பாதுகாத்தது நாங்கள் தான் எனக்கூறினார். அப்போதும் கேபி.முனுசாமி கண்டனம் தெரிவித்தார் என்பது நினைவு கூறத்தக்கது.












Click it and Unblock the Notifications