லோக்சபா தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கு தேர்தலா? அதிமுக கடும் எதிர்ப்பு
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றம் சட்டசபைக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இதனால் நேரம் மற்றும் செலவு மிச்சமாகும் என கருதுகிறார் பிரதமர் மோடி.
இதுதொடர்பாக மாநில அரசுகளிடமும் அவர் கருத்துக்களை கேட்டு வருகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.

சட்ட ஆணையம் ஆலோசனை
இதுதொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதிமுக எதிர்ப்பு
இந்நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்ட ஆணையத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஜெ. எதிர்ப்பு தெரிவித்திருந்தார்
தற்போதைய சட்டசபை ஆயுட்காலத்தை குறைக்க கூடாது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்றும் அதிமுக சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ல் ஆயுட்காலம் நிறைவு
மேலும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, நிலையான ஆட்சியை தரவேண்டும் என்பதற்காக 2016ல் மக்கள் அதிமுகவுக்கு வாய்ப்பளித்தனர். தமிழக சட்டசபைக்கு ஆயுட்காலம் 2021ல் நிறைவடைகிறது. மக்களுக்கு கொடுத்துள்ளோம்

வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம்
தேர்தல் சமையத்தில் நிறைவேற்றுவதாக பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினாலும் இன்னும் பல நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

குறைக்கப்படக்கூடாது
சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைப்பதால் மக்கள் விரும்பிய நிலையான ஆட்சி பாதிக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் என்ற திட்டத்தால் தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறைக்கப்படக்கூடாது.

சிவி சண்முகம் பங்கேற்பு
இதனிடையே டெல்லியில் சட்ட ஆணையம் நாளை நடத்தும் கருத்துக்கேட்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications