திருச்சி சிவாவை அறைந்த சசிகலா புஷ்பாவை மேற்கோள்காட்டுவதா? கருணாநிதிக்கு நமது எம்ஜிஆர் கண்டனம்
சென்னை: திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவை மேற்கோள் காட்டி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த கருணாநிதி, துறைகளை மாற்றுவதற்கு ஜெயலலிதா எப்படி அறிவுரை வழங்கினார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கையெழுத்தை போலியாக போடுவதற்கு சிலர் முயற்சிப்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கூறியிருந்தாரே? எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரையே சந்தேகிக்கலாம்
இதற்கு கண்டனம் தெரிவித்து டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
சமீப காலமாக கருணாநிதிக்கு சந்தேகப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது. இப்படியே போனா "நான் கருணாநிதி தானா?" என்று அவர் அவரையே சந்தேகித்துக்கொள்கிற நிலைமையும் ஏற்படலாம்!

சிவாவுக்கு அறை
இவ்வாறிருக்க, மக்களிடம் வெகு காலமாக அலசப்படுகிற ஐயம் யாதெனில், அது தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா ‘திகாரில்' ஒரு அறை பெற்றார் என்றால், தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருச்சி சிவாவோ தில்லி ஏர்போர்ட்டில் திருவாளர் கருணா தற்போது மேற்கோள் காட்டுகிற அந்த உத்தம அம்மையிடம் ஓங்கி நாலு ‘அறை' பெற்றார்.

சிவா பதவி ஏன் பறிக்கவில்லை?
ஆனாலும், இப்படி அறை வாங்கி அசிங்கப்பட்டுக் கிடப்பவர்களிடமிருந்து குறைந்தபட்சம் அந்த கொள்கை(?) பரப்பும் செயலாளர் பதவியைக்கூட பிடுங்குவதற்கு திராணியற்றுக் கிடக்கிறது தி.மு.க.வும், அதன் தலைமையும் என்றால் அதன் பின்னணி சமாச்சாரம் என்னவோ? என்பதுதான் அந்த ஐயம்!

வெட்கக் கேடு இல்லையா?
மு.க. முதலில் இந்த சந்தேகத்தை முன்வந்து தீர்க்க வேண்டும். ஏனெனில், அவர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவரை பொது இடத்தில் வைத்து செவிலிலேயே அறை விட்ட பெண்ணின் செயலை கண்டிப்பதற்கு பதிலாக, அந்த சேலைக்குப் பின்னாலேயே இவரும் போய் நின்று கொண்டு மேற்கோள் காட்டுவதும், வியாக்யானம் பேசுவதும் வெட்கக்கேடு அல்லவா!
இதுதான் ஒரு தலைவனுக்கான லட்சணமா? என்று நாடு கேட்கிறது!
இவ்வாறு டாக்டர் நமது எம்ஜிஆரில் எழுதப்பட்டுள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications