சர்ச்சை போஸ்டர் ஒட்டிய "1000 விளக்கு" கே.சி. விஜய்.. அதிமுககாரர்தான்!
சென்னை: சென்னையில் கன்னடர்களை மிரட்டும் வகையில் போஸ்டர் போட்ட 1000 விளக்கு கே.சி. விஜய் என்பவர் அதிமுககாரர்தான் என்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அவர் அதிமுக இல்லை என்று ஆவடி குமார் என்ற அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் கூறுகிறார்.
ஜெயலலிதா ஜாமீன் மனு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சமயத்தில் சென்னையை ஒரு சர்ச்சை போஸ்டர் பரபரப்பில் ஆழ்த்தியது. அதில் தமிழகத்தில் வசிக்கும் கன்னடர்களை சிறைபிடிப்போம் என்ற வாசகம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜைத் தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.

எச்சரிக்கை மட்டுமே... நடவடிக்கை இல்லை
ஆனால் இந்த போஸ்டரை ஒட்டிய அதிமுகவினர் மீது போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மாறாக எச்சரிக்கையுடன் விட்டு விட்டனர்.

அம்மாவை விடுவிக்காவிட்டால்
அந்த சர்ச்சைக்குரிய போஸ்டரில் எச்சரிக்கை எச்சரிக்கை. வஞ்சக தீர்ப்பு வழங்கிய கர்நாடக நீதிமன்றமே, மக்கள் முதல்வர் அம்மா அவர்களை உடனே விடுதலை செய். இல்லையேன்றால், தமிழகத்தில் வாழும் கர்நாடக மக்கள் அனைவரையும் சிறை பிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

வளர்மதி பெயரில்
இந்த போஸ்டரில் அதிமுக எம்.பி. ப.குமார், அமைச்சர் பா. வளர்மதி, எம்.எல்.ஏ வி.பி. கலைராஜன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

ஏற்பாடு 1000 விளக்கு கே.சி. விஜய்
இந்த போஸ்டரை ஒட்ட ஏற்பாடு செய்தவர் 1000 விளக்கு (இப்படித்தான் அதில் போட்டுள்ளது) கே.சி. விஜய் என்பவர் ஆவார். இவர் தென் சென்னை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் என்று போஸ்டரில் போட்டுள்ளனர். மேலும் முன்னாள் மாவட்டச் செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை என்றும் போட்டுள்ளனர்.

மறுத்துப் பேசிய ஆவடி குமார்
ஆனால் விஜய் அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்று தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமார் மறுத்துக் கூறியிருந்தார். இருப்பினும் விஜய் அதிமுகவைச் சேர்ந்தவர்தான் என்பதை அவரே நிரூபித்துள்ளார்.

நானாகதான் ஒட்டினேன்
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஜெயலலிதாவை, வஞ்சகம், சூழ்ச்சி செய்து, கர்நாடகத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். உடனடியாக ஜாமீன் வழங்குவதில் நீதிமன்றத்துக்கோ, கர்நாடக அரசுக்கோ என்ன பிரச்னை.

வேறு வழி தெரியவில்லையாம்
நாங்கள், பல்வேறு வகைகளில், நடத்திய போராட்டங்களுக்கு யாரும் மதிப்பு கொடுக்கவில்லை. அதனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான், இங்கிருக்கும் கர்நாடக மக்களை சிறை பிடிப்போம் என, போஸ்டர் ஒட்டினேன். காவிரி பிரச்னையில், தமிழகத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, ஜெயலலிதா பெற்று விட்டார் என்றதும், சதி செய்து, அவரை சிறைப்படுத்தி உள்ளனர்.

விளைவுகளை சந்திக்க வேண்டும்
இந்த போஸ்டருக்குப் பின்னும், கர்நாடக நீதிமன்றம் ஜெ.,வுக்கு ஜாமீன் வழங்கவில்லை. விளைவுகளை கர்நாடகம் சந்தித்துத் தான் ஆக வேண்டும். இந்த விஷயத்தில், கட்சிக்கும் மற்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
-
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
ஐபிஎல் போட்டியை பார்க்க.. எம்பி, எம்எல்ஏக்களுக்கு இலவச டிக்கெட்! கர்நாடக துணை முதல்வர் கொடுத்த ஆஃபர் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications