இவங்க வேற.. இடையே இடையே வந்து காமெடி பண்ணிக்கிட்டு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டியும், மீண்டும் முதல்வராக அரியணையில் அமர வேண்டியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நடத்தி வரும் பூஜைகள் இன்றும் தொடர்ந்து களை கட்டியிருந்தன.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஹோமம் ஒன்றில் கலந்து கொண்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு கற்கோடி அம்மன் ஆலயத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி முன்னிலையில் ஸ்ரீஜெயதுர்கா ஹோமம் நடைபெற்றது.

கவுன்சிலர் சாந்தி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஹோமத்தில் 108 சுமங்கலிகளுக்கு இலவச சேலைகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், கவுன்சிலர்கள் நுங்கை மாறன், சக்தி, புஷ்பா நகர் ஆறுமுகம், ஆகியோர் பங்கேற்றனர்.
பாலகங்கா ஏற்பாட்டில் தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை

அதேபோல, அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் முதல்வராக வேண்டி வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஏற்பாட்டில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.












Click it and Unblock the Notifications