17ம் தேதி வரை 'கவுச்சி' சாப்பிடக் கூடாது.. அதிமுகவினருக்கு ஜோசியரின் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 17ம் தேதியில் இருந்து ஜெயலலிதாவுக்கு நல்ல காலம் துவங்குவதாகவும், அவர் விடுதலையாக அதிமுகவினர் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா விடுதலையாக அதிமுகவினர் பல்வேறு பூஜைகள், யாகங்கள் நடத்துவதுடன் மொட்டை போடுவது, பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பதுமாக உள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் விடுதலை குறித்து பிரபல ஜோதிடர் ஷெல்வி கூறியதை பார்ப்போம்.

பரிகாரம்

பரிகாரம்

கேந்திராதிபதி தோஷத்தில் குரு கெட்டுப் போனதால் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தீர அதிமுகவினர் சில பரிகாரங்களை செய்வது நல்லதாம்.

அசைவம்

அசைவம்

பரிகாரம் செய்யும்போது அதிமுகவினர் சுத்தமாக இருக்க வேண்டுமாம். மேலும் அசைவம் சாப்பிடக் கூடாதாம்.

ஆலங்குடி

ஆலங்குடி

ஆலங்குடி குரு கோவிலில் அதிமுகவினர் தினமும் வணங்க வேண்டுமாம். அதிலும் வியாழன்தோறும் அபிஷேகமும், மஞ்சள் நிறத்தில் உணவு, வஸ்திரம் உள்ளிட்டவற்றை தானம் செய்வது ஜெயலலிதாவுக்கு நல்லதாம்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகனை வழிபட்டு சத்ரு சம்ஹார பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்குமாம்.

ஏன் பிரச்சனை?

ஏன் பிரச்சனை?

ஜெயலலிதாவின் ஜாதகத்தின்படி குரு திசையில் குரு புத்தி வீரியமாக உள்ளதாலேயே அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம். அந்த வீரியத்தை குறைக்க பலர் பரிகாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்குமாம்.

17ம் தேதி

17ம் தேதி

வரும் 17ம் தேதியில் இருந்து ஜெயலலிதாவுக்கு நல்ல திசை துவங்க உள்ளதாம். அதனால் அது வரை அதிமுகவினர் எந்த போராட்டத்திலும் ஈடுபடாமல் சுத்தபத்தமாக பரிகாரம் செய்ய வேண்டுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+