அரசுக்கு தொல்லை தர முயன்றவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சம்மட்டி அடி.. சிவி சண்முகம் பொளேர்

அரசுக்கு தொல்லை தர முயன்றவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடி என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு தள்ளுபடி

    சென்னை: அரசுக்கு தொல்லை தர முயன்றவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீரப்பு சம்மட்டி அடி என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

    ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா.பாண்டியராஜன் மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ் ஆர்.நட்ராஜ், ஓ.பன்னீர் செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன் ஆகிய 11 அதிமுக எம்எல்ஏக்கள் அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்தனர்.

    இதையடுத்து இவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி திமுக கொறடா சங்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரசியல் களத்தில் தோற்றவர்கள்

    அரசியல் களத்தில் தோற்றவர்கள்

    இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அரசியல் களத்தில் தோற்றவர்கள் அரசுக்கு நீதிமன்றம் மூலம் தொல்லை தர முயன்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    தீர்ப்பு சம்மட்டி அடி

    தீர்ப்பு சம்மட்டி அடி

    ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகவும், தீர்ப்பு மூலம் உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்றும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

    பாலும் பழமும்

    பாலும் பழமும்

    தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார். தீர்ப்பால் பாலும் பழமும் கிடைத்தது போல இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    புழுதிவாரி தூற்ற வேண்டும்

    புழுதிவாரி தூற்ற வேண்டும்

    மக்கள் என்ற பேராயுதம் இருக்கும் வரை திமுகவின் அத்தனை ஆயுதங்களும் எங்களை நோக்கி வராது என்றும் அதிமுக அரசு மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக வழக்கு தொடர்ந்தது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    கட்டியம் கூறுவதாக உள்ளது

    கட்டியம் கூறுவதாக உள்ளது

    உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்பு அளித்துள்ளார். பேசிய அவர் முத்தாய்ப்பான தீர்ப்புகளை நீதிமன்றம் அளித்துள்ளது; வர இருக்கும் தீர்ப்புகளுக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது என்றும் கூறினார். மேலும் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் வழக்கில் தலைமை நீதிபதி மிக தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்றும் பாண்டியராஜன் கூறினார்.

    நியாமான சரியான தீர்ப்பு

    நியாமான சரியான தீர்ப்பு

    நியாமான, சரியான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று செம்மலை கூறியுள்ளார். இதனிடையே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முகாந்திரம் உள்ளதாக ஹைகோர்ட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+