43 வயதில் திருமணம்.. நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்.. பெரும் சோகத்தில் அதிமுக எம்எல்ஏ!
நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென்று மாயமாகி உள்ளார்.
Recommended Video

ஈரோடு: 43 வயதுக்கு பின்னர் எம்எல்ஏவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மணப்பெண் மாயமாகிவிட்டது ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியுடன் கூடிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன். வயது 43. இவரது சொந்த ஊர் உஜ்ஜங்கனூர். நீண்ட காலமாக திருமணத்தை பற்றி நினைக்காத ஈஸ்வரனுக்கு சமீபத்தில்தான் உக்கரத்தை சேர்ந்த சந்தியா என்ற 23 வயது பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்.சி.ஏ. வரை படித்துள்ளார்.

பத்திரிகை தந்தனர்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலிலேயே திருமணத்தை நடத்திடலாம் என முடிவு செய்யப்பட்டு, வருகிற 12-ந் தேதி திருமண நாளும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக பத்திரிகை அச்சடிக்கும் வேலை ஜரூராக தொடங்கியது. பின்னர் ஒருத்தர் விடாமல் அனைத்து உறவினர்கள், கட்சியினர்களுக்கும் பத்திரிகை தரப்பட்டது. இரண்டு வீட்டிலும், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் இந்த பத்திரிகை தரும் வேலையை மட்டும் செய்தார்கள்.

தடபுடல் ஏற்பாடு
இரண்டு வீடுகளிலும் கல்யாண களை கட்டியது. ஏற்பாடுகளோ தடபுடல்தான்! இந்நிலையில் கடந்த 1-ந்தேதி காலை 11 மணியளவில் மணப்பெண் சந்தியா எங்கோ வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது "எங்கம்மா கிளம்பற? என்று அவரது அம்மா தங்கமணி கேட்டார். அதற்கு சந்தியாவோ, நான் சத்தியமங்கலத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு போய்ட்டு உடனே வந்திடறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ஆனால் சந்தியா அக்கா வீட்டுக்கு போகவில்லை என்று வீட்டிற்கு மெதுவாகத்தான் தெரியவந்தது.

சந்தியா எங்கே?
சந்தியா எங்கே போனார் என்று தெரியவில்லை. எங்கெங்கோ தேடி பார்த்தனர். 2 நாள் ஆகியும் சந்தியா கிடைக்கவில்லை. இதனால் தங்கமணி, மகளை காணோம் என்று போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில், "கொளத்துப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை என் மகள் காதலித்து வந்தாள், அதனால் அவருடன்தான் என் மகள் சென்றிருக்க வேண்டும்... என் மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையை கையிலெடுத்து, மாயமான சந்தியாவை தேடி வருகிறார்கள்.

அதிர்ச்சியில் எம்எல்ஏ
இதில் அதிகமாக அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பது எம்எல்ஏதான். 43 வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்த நிலையில், இப்போது தனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதால் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளார். எம்எல்ஏவின் அதிர்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. இந்த திருமணத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் என அனைவருமே கலந்து கொள்வதாக இருந்ததாம்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications