முதல்வரை சந்தித்த வேணுகோபால் எம்.பி: வாழ்த்து பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி. வேணுகோபால் மற்றும் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், டாக்டர். பி.வேணுகோபால், எம்.பி., நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி நிலைக் குழுத் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

புதிதாக அமைந்த லோக்சபாவில், எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கான தலைவர் பதவிகள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் இருஅவைகளிலும் சேர்த்து அதிக உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு 11 நிலைக் குழுக்களின் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, 113 உறுப்பினர் களைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து குழுக்களுக்கான தலைவர் பதவியும், 46 எம்பிக்களைக் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு நிலைக் குழுக்களின் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
திரிணமூல் காங்கிரஸைவிட இரண்டு எம்பிக்கள் கூடுதலாக (48) இருந்தபோதும் அதிமுகவைச் சேர்ந்த திருவள்ளூர் தொகுதி எம்.பி.யான டாக்டர் பி.வேணுகோபாலுக்கு கிராமப்புற மேம்பாடு நிலைக்குழு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், 1981-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், முனைவர் ரா.கண்ணன், திரு.கே.கணேசன், திரு. அசோக்குமார் குப்தா, திரு.ராஜீவ் நயன் செளபே ஆகியோர் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications