காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மத்திய அரசு மறுப்பு… நியாயமாக நடந்து கொள்ளுங்கள் - சி.ஆர் சரஸ்வதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசியல் செய்யாமல்
நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த 30ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, இந்த மாதம் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கெடுவிதித்தது. இதுதொடர்பாக அமைதியாக இருந்த மத்திய அரசு இன்று திடீரென்று வாரியத்தை அமைக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

ADMK slams Modi government on Cauvery Board

இதுகுறித்து சி.ஆர். சரஸ்வதி கூறியிருப்பதாவது:

2018ம் ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே மோடி அரசு காவிரி பிரச்சனையில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கர்நாடக தேர்தலை வைத்தே தமிழக மக்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு
அரசியல் செய்யமால் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கப்படாமல் காவிரி பிரச்சனைக்கு தீர்வே ஏற்படாது என்று சி.ஆர்.
சரஸ்வதி கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+