காவிரி: மத்திய அரசுடன் தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? கமல் எச்சரிக்கை
ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என கமல்ஹாசன் மிரட்டல் விடுத்துள்ளார்.
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுடன் தமிழகம் அமைதியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும் என்றும் அவர் கூறினார். காவிரியில் மத்திய அரசு செய்வது தவறு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
|
வெள்ளையனே வெளியேறு
மத்திய அரசை அவமரியாதை பேசுவதை நாங்கள் செய்ய மாட்டோம் என்ற கமல் வெள்ளையனே வெளியேறு என்பதுதான் போதுமானது என்றார். டே! வெள்ளைக்கார நாயே வெளியேறு என்று சொல்லும் அவசியம் இல்லை என்றும் கமல் கூறினார்.

திசை திரும்பமாட்டோம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் என்றும் காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள், திசை திருப்பினால், திசை திரும்பமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

எழுப்பவே முடியாது
கலவரங்கள் மூலம் திசை திருப்பினாலும் திசை திரும்பமாட்டோம் என்றும் மீண்டும் கோரிக்கை வைத்து உறங்குவர்களை எழுப்பலாம் என்றும் உறங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது என்றும் கமல்ஹாசன் கூறினார்.

தொடையை தட்டுவது வீரம் அல்ல
ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என்று கேட்ட அவர் வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என்றார். தொடையை தட்டுவது வீரம் அல்ல, தொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும் என்றும் கமல் எச்சரித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications