பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் காலருகே வந்து விழுந்த கல்.. திருச்சி அருகே பரபரப்பு
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிகழ்ச்சியில் பேசும்போது, கூட்டத்திலிருந்து 3 கற்கள் வந்தன. அதில் ஒரு கல் அமைச்சரின் கால் அருகே வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி: சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி, திருச்சி மாவட்டம், பெட்டாவாய்த்தலை பகுதியில், நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாக ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்தவரான அமைச்சர் வளர்மதி, திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்தவரான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இருவரும் பங்கேற்றனர்.

பறந்து வந்த கற்கள்
இந்த கூட்டத்தில், வெல்லமண்டி நடராஜன் பேசும்போது, கூட்டத்திலிருந்து 3 கற்கள் வந்தன. அதில் ஒரு கல் அமைச்சரின் கால் அருகே வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர்களின் ஆதரவாளர்கள் கல் வந்த திசை நோக்கி ஓடிச்சென்றனர். ஆனால் வீசியது யார் என்பது தெரியவில்லை.

சசிகலாதான்
இந்த கல் வீச்சில் யாரும் காயம் அடையவில்லை. இந்த பரபரப்புக்கு மத்தியில் வீராவேசமானார் அமைச்சர் நடராஜன், எங்களை எப்படி மிரட்டினாலும், அதிமுக பொதுச்செயலர் சசிகலா தான் என அவர் முழங்கினார். இதையடுத்து அவசரமாக பேச்சை முடித்து கிளம்பினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

கூட்டம் இல்லை
இந்த பொதுக் கூட்டத்துக்கு, 100க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர். அவர்களில் முக்கால்வாசி பேர் பெண்களாகும். ஏனெனில், இலவசமாக சேலை கொடுக்கிறோம் என கூறி பெண்களுக்கு ஆசை காட்டி அழைத்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ரத்து
முன்னதாக, சேம்பரசம் பேட்டை பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் அதிமுகவினர். ஆனால் அந்த பகுதி மக்கள் கொதிப்புடன் இருக்கிறார்கள் என்கிற தகவல் முன் கூட்டியே கிடைத்ததால் இரு அமைச்சர்களும் அந்த நிகழ்ச்சி ரத்து செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபா பேரவை எதிர்ப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, எம்.எல்.ஏ., சந்திரசேகர், துவரங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றபோது, தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில், 37 பேர் கறுப்பு சட்டையுடன், எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications