ஆட்சியை கலைத்துவிட்டு விட்டு தேர்தலை சந்திக்கலாம்.. சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் பரபரப்பு பேட்டி!
இப்போதுள்ள சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்று அஇதிமுக சூலூர் எம் எல் ஏ கனகராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர்: தற்போதைய தமிழக அரசியல் சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்று அஇதிமுக சூலூர் எம் எல் ஏ கனகராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று கனகராஜ் சூலூரில் அளித்துள்ள பேட்டியில், "பதவி ஆசை காரணமாக மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டார் ஓபிஎஸ். மாவட்ட அளவிலான நிர்வாகிகளை கைவிட்டுவிட்டார், இப்போது யார் நிர்வாகிகள் என்பதே தெரியவில்லை. அதனால் இந்தக் குழப்ப சூழலில் நான் யாரை ஆதரிப்பது என்று தெரியவில்லை.

அதனால் தற்போதுள்ள சூழலில், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தலை சந்திக்கலாம் . தற்போதைய சூழலில் எந்த அணிக்கும் எனது ஆதரவு இல்லை." என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "அஇதிமுகவில் அணிகள் இணைந்தாலும் இன்னும் பிளவு நீடிக்கத்தான் செய்கிறது. அதனால், ஆட்சியை கலைப்பே சரி. துணை முதலமைச்சராக பதவி ஏற்றதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்களின் ஆதரவு குறைந்து விட்டது. ஓபிஎஸ் அணியை இணைத்ததை எதிர்க்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எம்.எல்.ஏ கனகராஜ், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இப்போது எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று கூறியுள்ளார். இது அஇதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications