பசிப்பிணி போக்கும் சிவ ஆலய அன்னாபிஷேக தரிசனம்
சென்னை: ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட இறைவனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

‘பசி என்பது ஒரு பிணி' என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்ற பழமொழியும் பிரசித்தம். வயிறு பசிக்கும் போது அதற்கு உணவு கொடுக்கவேண்டும். பசியின்றி அனைவருக்கும் உணவு அளிக்கும் இறைவனை அன்னத்தால் அர்ச்சனை செய்வதைக் காண கண் கோடி வேண்டும் அல்லவா? ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று இந்த நிகழ்வினை காணலாம். அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்பது நம்பிக்கை.
எவ்வளவு பெரிய செல்வந்தர்கள் என்றாலும் ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் சாப்பிடப் போகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்' என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும் என்பது உண்மை.
ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான, தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய் இல்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.

சிவ ஆலயங்களில்
நேற்று ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் உள்ள சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், வெள்ளீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், ஆகிய ஏழு சிவ ஆலயங்களிலு ம் அன்னாபிஷேகம் நடைபெற்றது.அன்னாபிஷேகத்தை தரிசித்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஷ்வரர் ஆலயத்தில் ஆயிரம் கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. காரட், பீட்ரூட், பழங்கள், காய்கறிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது, இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கங்கை கொண்ட சோழபுரம்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பிரகதீஸ்வரர், பிரகன்நாயகி, மகஷாசுரமர்த்தினி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் நெல்லி பொடி, அரிசி மாவு, திரவியபொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், எலுமிச்சை பழம், இளநீர், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர், கங்கை தீர்த்தம் உள்பட 48 வகைப் பொருட்களால் மகா அபிஷேகமும், வில்வ இலை உள்பட 11 வகை இலைகள், 21 வகை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.

2500 கிலோ அரிசி சாதம்
காலை 8 மணி முதல் 2, 500 கிலோ பச்சரிசியால் சாதம் சமைக்கத் தொடங்கப்பட்டது. பதிமூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, அரிசி அன்னமாக படைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அன்னாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பெளர்ணமியையொட்டி பரிவாரமூர்த்திகளுக்கு பல்வகை பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ஸ்ரீகைலாசநாதரை 100 கிலோ அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், குளித்தலை ஸ்ரீ கடம்பனேஸ்வரர் திருக்கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications