மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பைக்கு விமான சேவை- மீண்டும் தொடங்கிய ஏர் இந்தியா
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் விமான சேவையை ஏர் இந்தியா மீண்டும் துவங்கியுள்ளது.
மதுரையில் இருந்து தினந்தோறும், பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் இந்த விமானம் 3 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும். பின்னர், சென்னையில் இருந்து 3.45-க்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மும்பை சென்று சேரும்.

எனினும், 5ம்தேதியான இன்று ஒரு நாள் மட்டும், மதுரையில் இருந்து இந்த விமானம் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சேவை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக இச்சேவையை ஏர் இந்தியா நிறுத்தியிருந்தது. மீண்டும் மதுரை-சென்னை-மும்பை சேவை தொடங்கியுள்ளதால் சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications