குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 14 பேருக்கு தீவிர சிகிச்சை: சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 14 பேருக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் இளம்பெண் சுவாதி உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த 14 பேருக்கும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி நேரில் சென்று பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரவள்ளி, 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். ஒரு பெண் பலியாகிவிட்டார். 14 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications