இரக்கமின்றி கொளுத்தும் வெயில்... சுருண்டு விழுந்து பலியான முதியவர் - வீடியோ
தமிழகத்தில் கத்தரி வெயில் நேற்று தொடங்கி இரண்டு நாட்களாக கொளுத்தி வருகிறது. அதற்கு முன்பும் வெயில் வதைத்தது. இந்நிலையில், விழுப்புரத்தில் கொடும் வெயில் தாங்காமல் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம்: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு முதியவர் ஒருவர் அநியாயமாக பலியாகியுள்ளார். கத்தரி வெயில் தொடங்கிய இரண்டாம் நாளே வெயிலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோடையில் தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தோ கொளுத்தென கொளுத்தி வருகிறது. சில இடங்களில் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்தாண்டு, வேலூரில் 117 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் உயர்ந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 110 டிகிரி ஃபாரன்ஹீட் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில், விழுப்புரத்தில் வெப்பத்தின் கொடுமையால், முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போதே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். கத்தரி வெயில் ஆரம்பமான இரண்டாவது நாளிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications