ஜெயலலிதா சிறை சென்ற செய்தியை முதல் பக்கத்தில் போடாத இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு!
சென்னை: உள்நாடு முதல் உலக நாடுகளின் ஊடகங்கள் வரை ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளிவரும் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 3வது பக்கத்தில் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் தனிநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனால் அவர் முதல்வர் பதவியை பறிகொடுத்தார். 10 ஆண்டு காலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகிவிட்டது.
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த தீர்ப்பு. இதுதான் இன்று வெளியான நாளேடுகளின் முதல் பக்க செய்தி.
ஆனால் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அதை 3-ம் பக்கத்தில் தான் பிரசுரித்ததது.
முதல் பக்கத்தில் ஐ..நாவில் பிரதமர் மோடி, பாகிஸ்தான் குறித்து பேசியதுதான் உள்ளது.