இன்று முதல் அனைவராலும் விஜயகாந்''தூ" என்று அழைக்கப்படுவார்.. அன்புமணி அசத்தல்!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: மக்கள் இனிமேல் விஜயகாந்த்தை, விஜயகாந்தூ என்றே அழைப்பார்கள் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அரசியல் ரீதியாக கேள்வி கேட்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் காறித் துப்பி அநாகரீகமாக நடந்து கொண்ட விஜயகாந்த் குறித்து தர்மபுரியில் செய்தியாளர்கள் டாக்டர் அன்புமணியிடம் கருத்து கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அன்புமணி, மக்கள் இனிமேல் விஜயகாந்தை விஜயகாந்தூ என்றே அழைப்பார்கள். கலைஞர், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை. விஜயகாந்தை கூட்டணிக்கு அழைப்பவர்கள் தூரமாக நின்றே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் அன்புமணி.
இதேபோல நாம் தமிழர் தலைவர் சீமானும், செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications