பிரச்சினைகள்... குழப்பம்... மக்கள் நலக்கூட்டணி ஒரு மக்கிப் போன கூட்டணி: அன்புமணி
திண்டுக்கல்: பிரச்சனைகள், குழப்பங்கள் நிறைந்த மக்கள் நலக்கூட்டணி, மக்கிப் போன கூட்டணி என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் நகரில் பாமகவின் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அன்புமணி, "தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில்தான் அதிக அளவு முறைகேடு நடந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டதால், தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடு குறைந்துள்ளது. அதிமுக அரசு மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்" என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, மக்கள் நலக்கூட்டணி குறித்து அவர் விமர்சித்தார்.
அதாவது, "மக்கள் நலக் கூட்டணி மக்கிப்போன கூட்டணி. அதைப்பற்றி தெரிந்து விட்டது. ஏனென்றால் அவர்களுக்குள் முரண்பாடான கருத்து உள்ளது. முதலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்று சொன்னார்கள். பின்னர் அறிவித்தார்கள்.
அவர்களுக்குள் பிரச்சனைகள், குழப்பங்கள் நிறைய உள்ளது. அதைப்பற்றி நாங்கள் பேசப்போவது கிடையாது. ஏனென்றால் அதனை ஒரு கூட்டணியாக நாங்கள் ஏற்றது இல்லை" என அன்புமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications