புதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள்... உற்சாகமாக பங்கேற்ற பாமக அன்புமணி
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அன்புமணி கலந்து கொண்டார்.
சென்னை : பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாமக லோக்சபா எம்.பி அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

புதுப்பானையில் பொங்கல்
வண்ண வண்ண கோலம் போட்டு கரும்புகள் தோரணங்களாய் அலங்கரிக்க மஞ்சள் கொத்து கட்டப்பட்ட புத்தம் புது பானையில் பெண்கள் பொங்கல் வைத்தனர்.

உற்சாக அன்புமணி
பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், கரும்பை கையில் எடுத்து பொங்கல் பானையில் கிண்டிவிட்டார். அப்போது பெண்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

கொண்டாட்டம் சரியா?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் தற்கொலை செய்து வரும் சூழலில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது சரியானது அல்ல என தெரிவித்தார்.
வறட்சி மாநிலமாக மாநில அரசு அறிவித்தது மட்டுமின்றி மத்திய அரசும் அறிவித்து அதற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுகொண்டார்.

ஜல்லிக்கட்டு
மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் எந்த தவறும் இல்லை எனவும் அன்புமணி கூறியுள்ளார்.

மலைவாழ் மக்களுடன் பொங்கல்
விவசாயிகள் மரணமடையும் போது பொங்கல் விழா கொண்டாடுவது சரியானதல்ல என்று கூறியுள்ள அன்புமணி கடந்த வாரம், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் சித்தேரி ஊராட்சி பேரேரி கிராமத்தில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

சவுமியா அன்புமணி
பசுமைதாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு சித்தேரி ஊராட்சியை சேர்ந்த கிராமமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடி நடனமாடினர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications