ஓகி புயலால் கன்னியாகுமரியில் கடும் பாதிப்பு- தேசிய பேரிடராக அறிவிக்க அன்புமணி வலியுறுத்தல்
தமிழக அரசு கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட இடங்களை சரியான முறையில் பார்வையிடவில்லை என அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்து இருக்கிறார்.
கன்னியாகுமரி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட போதும் அரசியல் தலைவர்கள் யாரும் எட்டிப்பார்க்காத நிலையில் அன்புமணிதான் பார்வையிட்டிருக்கிறார். மேலும் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளி கன்னியாகுமரியில் பார்வையிட்டார் அன்புமணி ராமதாஸ். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசு மீது நிறைய குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதில் ''பாதிக்கப்பட்ட இடங்களை அரசு சரியான முறையில் பார்வையிடவில்லை எனவும் ,மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலும், அத்தியவாசிய பொருள்கள் இல்லாமலும் தவித்து வருவதாகவும்'' கூறியுள்ளார்.
மேலும் ''லட்ச கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட வாழை , தென்னை, ரப்பர் போன்ற பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு சரி யான இழப்பிடு வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை விரைவில் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அதேபோல் ''கேரளாவில் மீனவர்களை தேடும் பணி விரைவாக நடந்து வருகிறது ஆனால் இங்கு எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் அனைவரும் தீவிரமாக உள்ளனர். கன்னியாகுமரியில் ஏற்பட்ட புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து விரைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பிடை வழங்க வேண்டும்.'' என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் உருக்குலைத்துப் போட்டிருக்கும் நிலையில் எந்த ஒரு அரசியல் தலைவருமே எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் பாமக இளைஞர் அணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் முதல் தலைவராக சென்று குமரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்












Click it and Unblock the Notifications