சென்னை மீனவர்களின் பிரச்சினைக்கும், சந்திரபாபு நாயுடு கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் என்ன சம்பந்தம்?
சென்னை: சென்னையில் கரிக்காட்டு குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது பிரச்சினைக்காக ஆந்திராவைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்களை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குக் கூட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவப் பெண்களுடன் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராமகிருஷ்ணா, மஸ்தான் ராவ் ஆகியோரும் வந்தனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

சென்னை நீலாங்கரை அருகே உள்ள கரிக்காட்டு குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுடன் இந்த ஆந்திர எம்.எல்.ஏக்களும் வந்திருந்தனர். பின்னர் இரு தரப்பும் தனித் தனியாக கமிஷனரிடம் புகார் மனுக்களை அளித்தது.
அதன் பின்னர் இரு எம்.எல்.ஏக்களும் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரிக்காட்டு குப்பம் மீனவர் கிராமத்தையொட்டி கடற்கரை பகுதியான சுமார் 2 ஏக்கர் நிலத்தை சிலர் போலி பட்டா தயாரித்து ஆக்கிரமித்து சுவர் எழுப்பி விட்டனர். ரூ.16 கோடி மதிப்புள்ள இந்த நிலம் ஜமீன்தார் ஒருவரால் அங்குள்ள கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
அந்த இடத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்தி இருந்தனர். ஆக்கிரமிக்கப்பட்டதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு எங்களுக்கு சொந்தமான இறால் பண்ணையும், விருந்தினர் இல்லமும் உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக எங்களால் அங்கு செல்ல முடியவில்லை.
நில ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கானாத்தூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடற்கரை நிலத்தை ஆக்கிரமித்தவர் பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications