For Daily Alerts
Just In
அனிதா உடலை வாங்க தந்தை மறுப்பு... தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக போலீஸ் மீது புகார்
அனிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக அவரது தந்தை சண்முகம் புகார் செய்தார்.
அரியலூர்: பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அனிதாவின் உடலை வாங்க அவரது தந்தை சண்முகம் மறுப்பு தெரிவித்தார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் உடல் அரியலூர் மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அங்கு அந்த பரிசோதனை முடிந்தது. இந்நிலையில் அனிதாவின் உடலை வாங்க தந்தை சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போலீஸார் என்னிடம் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கினர். கையெழுத்து போட்டால்தான் அனிதாவின் உடலை ஒப்படைப்போம் என மிரட்டல் விடுத்தனர். கையெழுத்து பெற்றதற்கான விளக்கம் அளித்தால்தான் உடலை வாங்குவோம் என்று அவர் தெரிவித்தார்.
Comments
English summary
Anitha's Father Shanmugam accuses that Police has got signature to do postmordem on Anitha's body on compulsion.
Story first published: Friday, September 1, 2017, 21:11 [IST]