அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்: ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது அண்ணா பல்கலை தேர்வுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு மே 23 ஆம் தேதி நடைபெற இருந்த பொறியியல் படிப்பு தேர்வுகள் ஜூலை 1 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பருவமுறை தேர்வுகள் 23-ந்தேதி நடைபெற இருந்தன. அந்த தேர்வுகள் அனைத்தும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தேர்தல் காரணமாக ஜூலை 1-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்று அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்துள்ளார்.

Anna University exam postponed

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் சவுந்தரபாண்டியன் தெரிவிக்கையில் நேற்று(18-ந்தேதி ) நடைபெற இருந்த தேர்வுகள் மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தேர்வு வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+