அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்: ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது அண்ணா பல்கலை தேர்வுகள்
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு மே 23 ஆம் தேதி நடைபெற இருந்த பொறியியல் படிப்பு தேர்வுகள் ஜூலை 1 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பருவமுறை தேர்வுகள் 23-ந்தேதி நடைபெற இருந்தன. அந்த தேர்வுகள் அனைத்தும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தேர்தல் காரணமாக ஜூலை 1-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்று அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் சவுந்தரபாண்டியன் தெரிவிக்கையில் நேற்று(18-ந்தேதி ) நடைபெற இருந்த தேர்வுகள் மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தேர்வு வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications