சசிபெருமாள் இறந்த செல்போன் டவர் அருகே உண்ணாவிரதம்: மதுரை மாணவி நந்தினி கைது
கன்னியாகுமரி: காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த செல்போன் கோபுரம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. இவர் பூரண மதுவிலக்கு கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காலை அவர் காந்தியவாதி சசிபெருமாள் மதுவிலக்கு கோரி உயிர் நீத்த மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலை கடைக்கு வந்தார். சசிபெருமாள் உயிரிழந்த செல்போன் கோபுரம் எதிரில் உள்ள கோவில் முன்பு அமர்ந்து அவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அவரது தந்தை ஆனந்தனும் பங்கேற்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக மாணவி நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்தனர். அங்கிருந்து அவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications