தேசிய கொடியை எரித்ததும் பிரதமருக்கு எதிராக கோஷம் போட்டதும் தேசவிரோதம்- நிர்மலா சீதாராமன் ஆவேசம்
நம் நாட்டின் கொடியை எரித்தவர்கள் தேச விரோதிகள் தான். அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் நடைபெற்ற வன்முறை எதிர்பாராதது என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், மாணவர் புரட்சியில் தேச விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்று தெரிவித்தார்.
சென்னை தி. நகரில் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறினார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற மாணவர் புரட்சியில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டனர். தேசத்திற்காக எதிராக முழக்கமிடுபவர்கள், தேசியக்கொடியை எரிப்பவர்கள் தேச விரோதிகள்தான். இது என்னுடைய தேசம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் பதவிக்கு மதிப்பு தரவேண்டும். பிரதமர் மோடியை அதிக அளவில் விமர்சனம் செய்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள் தேச விரோதிகள் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த கலவரத்தை யாரும் எதிர்பார்க்காவில்லை என்றும் தெரிவித்தார்.
எந்த மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அரவணைத்து செல்கிறது. மத்திய குழுவின் அறிக்கைக்குப் பின்னர் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications