ஆளுக்கு ஒன்றரை லட்சம்.. வீடு தருவதாக சுமார் 50 லட்சம் அபேஷ்! அரசு பேருந்து ஓட்டுநருக்கு முன் ஜாமீன்
சென்னை: நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் தலா ஒன்றரை லட்சம் ரூபாயை வசூலித்து மொத்தம் ரூ.49.50 லட்சத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த சுரேஷ்பாபு. இவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக இவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரூ.49.50 லட்சம் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என சுரேஷ் பாபு வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை அயம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் வசூலித்து இருக்கிறார் அரசு பேருந்து ஓட்டுநர் சுரேஷ் பாபு. இப்படியே ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூலித்த அவர், வீடு வாங்கித் தராமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த அந்தோனி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்று சுரேஷ்பாபு கூறியதை நம்பி அவரிடம் பணம் கொடுத்ததாகவும், அதை பெற்றுக்கொண்டு பணத்தையும் கொடுக்காமல், வீட்டையும் வாங்கித் தராமல் சுரேஷ்பாபு மோசடி செய்ததாக புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி-யிடம் அளித்த புகாரில், சுரேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் மூவர் மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சுரேஷ்பாபு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 25 லட்சம் ரூபாய்க்கான அசையா சொத்துக்கான ஆவணங்களை எழும்பூரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன் தினமும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications