செம்மரக் கடத்தலில் சிக்கும் நடிகர்.. தமிழ் நடிகரா, தெலுங்கு நடிகரா?... பரபர தகவல்கள்!
சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஒரு நடிகர் சிக்கியிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் கிளம்பியுள்ளன. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகரா அல்லது ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு நடிகரா என்று தெரியவில்லை. நடிகர் ஒருவரைப் போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்து ஆந்திரப் போலீஸ் தரப்பில் எந்த தகவலும் இல்லை.
செம்மரக் கடத்தல் விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 20 தமிழர்களைக் கொன்று குவித்த கையோடு தற்போது பெரும் புள்ளிகள் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளது ஆந்திர அரசு.முன்னாள் ஆந்திர மற்றும் தமிழக அமைச்சர்கள் சிலர் இதில் சிக்கவுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. மொத்தம் 3 முன்னாள் அமைச்சர்கள் வலையில் சிக்குகின்றனராம். அவர்களில் எத்தனை பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், எத்தனை பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

ஆந்திர மாநில ஐ.ஜி.கோபாலகிருஷ்ணா மேற்பார்வையில், சித்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சீனிவாஸ் தலைமையில் 80 பேர் கொண்ட 2 தனிப்படைகள் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் செம்மர கடத்தலில் ஈடுபடும் ஏஜெண்டுகள் 16 பேர் சிக்கினார்கள். இதில் ஒருவரிடம் விசாரணை நடத்தியபோது சென்னையை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் மூலம் செம்மர கட்டைகளை விற்றுவருவதாக தெரிவித்தார். சவுந்தர்ராஜன், மேற்குவங்காள மாநிலம் வழியாக சீனாவுக்கு செம்மர கட்டைகளை கடத்தி விற்று வருவது தெரியவந்தது.
அவர் பல டன் மதிப்புள்ள செம்மர கட்டைகளை சீனாவுக்கு கடத்துவதற்காக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கொண்டு சென்று இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஎஸ்பி கிரிதர்ராவ் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் மேற்கு வங்காளத்துக்கு சென்றனர். அவர்கள் மேற்கு வங்காளத்தில் விசாரித்தபோது, பூடானுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் அவர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பூடான் போலீஸ் துணையுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது யானைகள் துரத்தியதால் தப்பி வந்த சவுந்தர்ராஜனை போலீசார் பிடித்தனர்.
அவரை கைது செய்த அதிரடிப்படை போலீசார், அங்கு சீனாவுக்கு கடத்த முயன்ற 149 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். சவுந்தர்ராஜனின் குடும்பம் தற்போது மியான்மர் நாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சவுந்தர்ராஜனை போலீசார் சித்தூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சென்னை ஆவடி சிப்காட் பகுதியில் உள்ள குடோனில் சரவணன் என்பவரது கட்டுப்பாட்டில் செம்மர கட்டைகளை பதுக்கியிருப்பதாக கூறினார். இதனையடுத்து அதிரடிப்படை போலீசார் 30 பேர் சென்னை ஆவடி சிப்காட்டிற்கு விரைந்தனர். அங்குள்ள குடோனில் 167 செம்மர கட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சவுந்தர்ராஜனின் கூட்டாளி சரவணனை கைது செய்தனர். சரவணனிடம் கைப்பற்றப்பட்ட செம்மர கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.57 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் ஒரு நடிகரைப் பிடித்து ஆந்திர போலீஸார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இவர் யார், தமிழ் நடிகரா அல்லது தெலுங்கு நடிகரா என்பது தெரியவில்லை. ஆந்திரப் போலீஸ் தரப்பிலும் இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. இதனால் குழப்பம் அதிகரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications