நீட் தேர்வு எழுத கேரளா, ராஜஸ்தான் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவலாம், வாங்க!
மொழி தெரியாத இம்மாநிலங்களில் தமிழக மாணவ, மாணவிகள் கஷ்டப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டவும், உதவிகள் செய்யவும், நல்ல இதயங்கள் முன்வரலாம்.
Recommended Video
சென்னை: நீட் தேர்வு தேவையில்லை என கூறி வந்த தமிழக மாணவ, மாணவிகளை, அட்லீஸ்ட் தமிழ்நாட்டிலாவது தேர்வு மையங்களை அமையுங்களேன் என்று கெஞ்ச வைத்துள்ளது சி.பி.எஸ்.இ., அதாவது மத்திய கல்வி வாரியம்.
தமிழகத்தில் சென்னை உட்பட வெறும் 10 இடங்களில் தேர்வு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால், கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு தமிழக மாணவ, மாணவிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மொழி தெரியாத இம்மாநிலங்களில் தமிழக மாணவ, மாணவிகள் கஷ்டப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டவும், உதவிகள் செய்யவும், நல்ல இதயங்கள் முன்வந்துள்ளன.
இந்த உதவிப் பாலத்தின் ஒரு தூணாக 'ஒன்இந்தியாதமிழ்' இணைகிறது. ராஜஸ்தான் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள, உதவி செய்ய வாய்ப்புள்ள நல் இதயங்கள், தங்களை பற்றிய விவரங்களை [email protected] என்ற இந்த இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். இந்த பக்கத்தில், அந்த விவரங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும்.
வாருங்கள், தமிழர்களின் உதவும் குணத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றுவோம்.