அனிதாவின் அநியாய மரணம்.. மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு.. தலைவர்கள் கடும் கோபம்
அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது போன்ற செயல்களில் மாணவர்கள் எதிர்காலத்தில் ஈடுபடக் கூடாது என்று அரசியல் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Recommended Video

அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள மாணவி அனிதாவின் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது : ஒடுக்கப்பட்ட மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது.ஓராண்டுக்கு விலக்கு கேட்டு கிடைக்காத நிலையில் தொடர்ந்து அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு விலக்கு பெறாததாலேயே அவர் தற்கொலை செய்ய நேரிட்டது.

மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றம் அனைத்தும் கைவிட்டதால் மாணவி விரக்தியடைந்துள்ளார். அனிதாவின் தற்கொலைக்கு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். மற்றொரு புறம் மருத்துவ கனவோடு இருக்கும் மாணவர்கள் நீட் தேர்வால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தாண்டிச் செல்ல வேண்டும், இதற்காக மோசமான முடிவுகளை எடுக்கக் கூடாது.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பு கிடைக்காவிட்டால் வேறுவாய்ப்புகள் உண்டு என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். பல மாணவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தவர் அனிதா என்றும் கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications