For Daily Alerts
Just In
வேலூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் வயலில் இறங்கியதால் பரபரப்பு
வேலூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் வயலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
ராணுவ ஹெலிகாப்டர் வயலில் இறங்கியதால் பரபரப்பு
வேலூர்: வாணியம்பாடி அருகே ராணுவ ஹெலிகாப்டர் வயலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அருகே வாணியம்பாடி குளிதிகை பகுதியில் பாலாற்றின் அருகே விவசாய நிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரை இறங்கியது. இயந்திரக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வயலில் இறங்கிய ஹெலிகாப்டரை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.
வயலில் இறங்கிய ஹெலிகாப்டரில் விமானி உட்பட 4 பேர் இருந்துள்ளனர். பெங்களூரில் இருந்து சென்னை வந்த போது திடீரென ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் வீரர் ஹெலிகாப்டரை வயலில் இறக்கியதாக கூறப்படுகிறது.
Comments
English summary
Army helicopter landed near Vaniyampadi in the field. Due to technical issue helicoptor landed in the field.